Latest News

March 29, 2015

மாங்குளத்தில் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்-கஞ்சா வைத்து கதையை திருப்பியது ஸ்ரீலங்கா காவல்துறை
by admin - 0


vivasaayi
SHOOT
இளை­ஞ­ரொ­ருவர் மீது பொலிஸார் மேற்­கொண்ட துப்­பாக்கி பிர­யோ­கத்தில் அவ் இளைஞன் காய­ம­டைந்து வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

மாங்­குளம் பகு­தியில் (26/03/2015)நேற்று முன்­தினம் இரவு ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வரை மறித்து சோதனை செய்ய முற்­பட்­டனர். இதன்­போது குறித்த இளைஞன் தப்­பிச்­செல்ல முனைந்த­போது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பொலிஸார் தெரிவித்­தனர்.

இவ்­வாறு காய­ம­டைந்­த­வ­ரிடம் கஞ்சா பொதி­யொன்று காணப்­பட்­ட­தா­கவும் ஆவ­ரங்கால் புத்­தூரை சேர்ந்த தட்சணா­மூர்த்தி தர்சன் (வயது26) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.பொலிஸாரின் இந்த நடவடிக்கை அந்த இளைஞர்  மீது பழிதீர்க்க அவர்மீது கஞ்சா  கொண்டு சென்ற ஒரு கதையை திருப்பியதாக  பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
« PREV
NEXT »