மக்கள் உண்மையுடனும் நேர்மையுடனும் உழைக்கவேண்டும் வேண்டும் என்று முன்னால் அமைச்சரும் மகிந்தவின் வடக்கு ஆதரவாளருமான டக்கிளஸ் தேவானந்தா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் அமைந்துள்ள EPDP அலுவலகத்தில் நேற்று 09/10/2015 அன்று நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர்கள் என்று கூறப்படுபவர்களை அழைத்து கலந்துரையட்டும் போது இதனை தெரிவித்தார் .
தற்பொழுது தமிழ்தேசிய கூட்டமைப்பு மாகாணத்திலும் மத்தியிலும் அதிகாரத்தை வைத்துள்ளதாகவும் அதனை பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ள அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அனால் கூட்டமைப்புக்கு மக்கள் பிரச்சனையில் அக்கறை இல்லை என முன்னர் அதிக காலம் சிங்கள அரசுடன் இணைந்திருந்து தற்பொழுது அநாதரவாக நிற்க்கும் முன்னால் வடக்கு மத்திய அமைச்சர் தெரிவித்தார் .
Social Buttons