Latest News

March 15, 2015

பேயாடி கூழாங்குளம் காணியை இராணுவத்தினருக்கு கொடுக்க முடியாது
by admin - 0

vivasaayi
vavuniya
வவு­னியா பேயா­டி­கூ­ழாங்­கு­ளத்தில் இரா­ணு­வத்­தி­னரின் 56 ஆவது படைப்­பி­ரிவு உள்ள காணியை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கொடுக்க முடி­யாது என காணி உரி­மை­யா­ளர்கள் தெரிவித்­துள்­ளனர்.
வவு­னியா பேயா­டி­கூ­ழாங்­கு­ளத்தில் அமைந்­துள்ள 8 பேருக்கு சொந்­த­மான சுமார் 30 ஏக்கர் காணியை இரா­ணுவ தேவைக்­காக சுவீ­க­ரிப்­ப­தாக விசேட காணி சுவீ­க­ரிப்பு உத்­தி­யோ­கத்­தரால் ஒரு வரு­டத்­திற்கு முன்னர் அறி­வித்தல் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
இந் நிலையில் அவர்கள் சட்ட உத­வியை நாடி­யுள்ள நிலையில் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை 17 ஆம் திகதி இரா­ணுவ தேவைக்­காக சுவீ­க­ரிக்க நில அளவை செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு கடிதம் மூலம் தற்­போது தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.
இந் நிலை­யி­லேயே தமது காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்கு அனு­ம­திக்க முடி­யாது எனவும் புதிய அரசு பொது மக்­களின் காணியை அவர்­க­ளிடம் கைய­ளிப்­ப­தாக தெரிவித்த நிலையில் மீண்டும் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடு தமக்கு கவலையளிப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »