மைத்திரியின் ஆட்சி சம்பந்தனின் ராஜதந்திரம் ஓமந்தை சோதனை சாவடி சாட்சி. நல்லென்னத்தை வெளிப்படுத்தும் மைத்திரி ஓமந்தை சாவடியே சாட்சியாக இருக்கிறது.
வன்னியில் நுழைவாயிலான ஓமந்தையிலுள்ள படையினரது சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் மீண்டும் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகனப்பதிவுகள் எதுவுமின்றி வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் மக்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்களின் பினனர் மீண்டும் சோதனை நடவடிக்கைகளும் வாகனப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றது.
வாகன சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பயணிக்கும் வாகன விபரஙகளை பதிவு செய்த பின்னரே மேற்கொண்டு பயணிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த திங்கட்கிழமையில் இருந்து அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் நிசா பிஸ்வால் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையினில் சோதனை சாவடி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment