இன்று மதியம் 1.30 மணிக்கு ஜும்மா தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும்.பிரதேச செயலாளர் அதற்கு தடையாக உள்ளதாகவும் எனவே அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியும் இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் போது பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரத்தின் கொடும்பாவி எரிப்பதற்கு மக்கள் முயன்ற போதும் சில சமூக சேவகர்கள் என தங்களை அடையாளப்படுத்திய நபர்களை அதனை தடுத்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.
No comments
Post a Comment