Latest News

February 26, 2015

மீரி­ய­பெத்த மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட குடும்­பஸ்தர் மீது இரா­ணு­வத்­தினர் தாக்­குதல்
by admin - 0

கொஸ்­லந்தை மீரி­ய­பெத்தை மண் சரிவில் பாதிக்­கப்­பட்டு மாக்­கந்த தேயிலத் தொழிற்­சா­லையில் தற்­கா­லி­க­மாக தங்­கி­யி­ருக்கும் ஒருவர் இரா­ணு­வத்­தி­னரால் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னமை தொடர்பில் நேற்று புதன்­கி­ழமை இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு 
 செய்­யப்­பட்­டுள்ளது.
கண­பதி இர­வீந்­தர குமார் என்ற ஒரு பிள்­ளையின் தந்­தையே இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்ள அதே­வேளை இலங்கை மனித உரி­மைகள் அணைக்­கு­ழுவில் 681/15 எனும் இலக்­கத்தின் கீழ் முறைப்­பாடு பதி­யப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, பண்­டா­ர­வளை பொலிஸ் நிலைய அதி­கா­ரி­யொ­ரு­வரால் அச்­சு­றுத்­தப்­பட்­ட­தா­கவும் தாக்­குதல் விட­யத்தை வெளியில் கூற வேண்டாம் என்றும் அழுத்தம் கொடுத்து வரு­வ­தா­கவும் தாக்­கு­த­லுக்­குள்­ளான நபர் தெரி­விக்­கின்றார்.

இரா­ணு­வத்­தி­னரால் தாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கொஸ்­லந்தை பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டப்­பட்ட போதிலும் அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­காத கார­ணத்­தி­னா­லேயே இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறை­யிட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

கொஸ்­லந்தை - – மீரி­ய­பெத்தை மண் சரி வில் பாதிக்­கப்­பட்ட கண­பதி இர­வீந்­தி­ர­குமார் தற்­போது மார்­கந்­த­ தே­யிலைத் தொழிற்­சா­லையில் தனது குடும்­பத்­தி­ன­ரு டன் தங்­கி­யுள்ளார். இவ­ரது சகோ­த­ரியும் தாயாரும் மண்­ச­ரிவில் புதை­யுண்­டார்கள்.

மாக்­கந்தை தேயிலைத் தொழற்­சா­லையில் பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த படை த் தரப்­பினர் அங்கு தகாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வந்­ததன் கார­ணத்­தினால் முரண்­பட்­ட­மையே இர­விந்­தர குமார் மீதான தாக்­கு­த­லுக்கு காரணம் எனக் கூறப்­ப­டு­கி­றது.

இதனை மைய­மாக வைத்தே கடந்த 9 ஆம் திகதி இரவு வேளையில் இரா­ணுவச் சிப்­பாய்கள் சிலரால் கடு­மை­யாக தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்ளார். இது தொடர்பில் கொஸ்­லந்தை பொலிஸ் நிலை­யத்தில் கடந்த 11 ஆம் திகதி முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

எனினும் எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
தனது மனை­வி­யு­டனும் 5வயது நிரம்­பிய மக­ளு­டனும் மாக்­கந்த தொழிற்­சா­லையில் தொடர்ந்தும் தங்­கி­யி­ருப்­பது அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும் இரவீந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பதுளை மாவ ட்ட அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள், பாதுகாப்பு அமைச்சர் சம்பந்தப்ப ட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு கோரப்படுகிறது.
« PREV
NEXT »