Latest News

December 09, 2014

மின் கம்பத்தின் உச்சியில் ஏறி போராட்டம் அமைச்சர் வரவிட்டால் தற்கொலை செய்வேன் என மிரட்டல்
by admin - 0

புறக்கோட்டை பகுதியில் தற்போது நபர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

அப்பகுதியில் உள்ள சுமார் 30 அடி மின்கம்பம் ஒன்றில் அரை மணித்தியாலமாக ஏறி நின்று கொண்டு போக்குவரத்து அமைச்சர் உடனடியாக தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இப்பகுதியில் தீயணைப்புப்படை மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதி போக்குவரத்து நெரில் உள்ள இடமாக காணப்படுகிறது.

அதேவேளை, சற்றுமுன் கிடைத்த தகவலின் படி குறித்த நபர் பாதுகாப்பாக கீழ் இறக்கபட்டுள்ளார்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் 

இலங்கை செய்தியாளர் விடுதலை 

« PREV
NEXT »

No comments