படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில் குண்டு வெடிப்பில் காயமடைந்த பெண் சென்னையை சேர்ந்த பவானி(வயது 37) என்றும் மற்றவர்கள் கார்த்திக்(22), சந்தீப்(28) என்றும் தெரிய வந்தது. கார்த்திக் பவானியின் சகோதரர். சந்தீப் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார்.
குண்டு வெடிப்பில் சென்னை பெண் பவானியின் இடதுபக்கம் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் இரவு 10–50 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தீவிரவாதிகளின் நாசவேலையா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments
Post a Comment