Latest News

December 12, 2014

அத்துருகிரியவில் விமான விபத்து; நால்வர் மரணம்
by admin - 0

அத்துருகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால், குறைந்தபட்சம்  நான்கு பேர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ள  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இந்த  விமானம்,  இறப்பர் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   ரஷ்ஷியாவின் தயாரிப்பான அன்ரனொவ் -32 என்ற வகையை சேர்ந்த விமானமே விபத்துக்குள்ளானது.

கட்டுநாயக்கவிலிருந்து இரத்மலானைக்கு இந்த விமானம் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், இந்த விமானத் தொடர்பை தாம் இழந்ததாக இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

காட்சித் தெளிவின்மை இந்த விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாமென்று சிவில் விமான போக்குவரத்துச்சபை தெரிவித்துள்ளது.

இந்த இறப்பர் தோட்டத்தில் நான்கு வீடுகள் அமைந்துள்ள நிலையில், ஒரு வீட்டின் கூரை இதன்போது சேதமடைந்துள்ளது.  இதன்போது, எரிகாயங்களுக்குள்ளான ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எத்தனை எம்மவர்களை கொன்று குவித்தவன் இன்று பாடையில் 
« PREV
NEXT »