அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை தம்முடன் இணைத்துக்கொள்வதற்கான பேரம்பேசலொன்றை மேற்கொண்டுள்ளது. இதனை கூட்டமைப்பின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நேற்று இரவு அணுகிய அரசாங்கத்தரப்பினர் தமது தரப்புடன் இணைந்தால் அமைச்சுப்பதவியொன்றை வழங்குவதாகவும், வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்திக்குரிய முழுமையான நிதியை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே குறித்த விடயம் தொடர்பாக சிந்தித்து சிறந்த முடிவொன்றை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் நாம் இத்தனை வருடங்களாக பதவிகளுக்காக போராடவில்லை எனக்குறிப்பிட்டதுடன் சலுகைகளைப் பெறுவது எமது நோக்கமல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் முதலில் அரசாங்கம் நல்லெண்ண நோக்கமாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் 30ஆயிரம் வரையிலான எமது உறவுகளின் சொந்தக் காணிகளை மீளக்கையளித்து அவர்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப் படுத்தவேண்டும் என வலியுறுத்தி யதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Social Buttons