Latest News

November 05, 2014

London பாதுகாப்பு அதிகரிப்பு
by admin - 0

லண்டனில் முன்னெப்போதும் இல்லாத அளவு பாதுகாப்பு அதிகரிப்பு.படு பயங்கர ஆயுதங்களை ஏந்திய பொலிசார்...

இஸ்லாமிய போராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில், லண்டன் தெருக்களில் ரோந்துக்கு நடமாடும் பொலிசார் கைகளில் படு பயங்கரமான ஆயுதங்கள் காணப்படுவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. போராளிகள் தாக்கலாம் என்று கருதப்படும் இடங்களில் நடமாடும் பொலிசாரிடம் என்ன இருக்கிறது என்று சற்றுப் பார்போம்.

1.குண்டு துளைக்காத ஆடையை அணிந்துள்ளார்கள்.

2.தொடர்புகொள்ள வசதியா ஒன்று அல்ல 2 வயர்லெஸ் கருவிகளை பாவிக்கிறார்கள்.

3.டீசர் எனப்படும் மின்சார துப்பாக்கியை வைத்திருக்கிறார்கள். இதனால் சுட்டால் 50,000 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும்.

4.9MM கைத்துப்பாகி 17 ரவைகளைக் கொண்ட செமி ஆட்டோமெட்டிக்

5.பகலில் கூட பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தக்கூடிய எல்.ஈ.டி லைட்

6.கோஜ் G36 C எனப்படும் அதி நவீன இயந்திர துப்பாக்கி. 30 ரவைகளோடு

7.கை விலங்குகள் மற்றும் கையில் அணியும் கையுறை.

இதுபோன்ற பல ஆயுத தளபாடங்களோடு தான் லண்டனில் உள்ள பொலிசார் வீதிகளில் நடமாடுகிறார்கள். இவை அனைத்துமே இஸ்லாமிய போராளிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலை அடுத்தே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆகும்.



« PREV
NEXT »

No comments