பொது வேட்பாளர் மைத்திரி, பிரதமராக ரணில்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக, தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை அறிவிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் ஆய்வுக்குழு தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சி வெற்றி பெறின் பிரதமராக, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் தெரிவு செய்ய யோசனை வழங்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் இன்று மாலை 04.00 மணியளவில் இடம்பெறவுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment