Latest News

November 10, 2014

வௌிநாட்டில் இருந்து வந்த விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது
by admin - 0


வௌிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், தற்போது கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இவர் கட்டாருக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »