Latest News

October 27, 2014

புலிகள் மீள உருவாக்கத்தின் தொடர் ஒருவர் கைது
by admin - 0

தமிழீழ விடுதலைப்புலிகளை மீளவும் கட்டியெழுப்புகின்றார் என்ற குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்புப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டு சுன்னாகம் பசுபதிப்பிள்ளை முகாமில் வசித்து வரும் அங்கலிங்கம் சந்திரகுமார் (வயது 40) என்ற குடும்பஸ்தரே வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீளவும் கட்டி யெழுப்புகின்றார் என்ற குற்றச்சாட்டிலேயே மேற்படி நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதற்கான கதை ஆசிரியர்கள் வவுனியாவில் முகம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 


« PREV
NEXT »

No comments