Latest News

October 20, 2014

மூத்த சிங்கள ஊடகவியலாளருக்கும் கொலை அச்சுறுத்தல்: தொடரும் ஊடக அடக்குமுறை
by admin - 0

டிரான்பரன்சி இன்டநஷனல் அமைப்பினால் நடத்தப்படும் புலனாய்வு செய்தியிடல் குறித்த செயலமர்வுகளில் முக்கிய பங்காற்றியதற்காக மூத்த ஊடகவியலாளர் ஐயசிறி ஜயசேகரவிற்க்கு தேசப்பற்றுள்ள சக்திகள் என்ற அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இது குறித்து பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தனக்கு தொலைபேசி மூலமாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன்- குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நேரம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.

ஓக்டோபர் 14 ம்திகதி தனக்கு முதலாவது மிரட்டல் அழைப்பு 0094756245489 என்ற இலக்கத்திலிருந்து வந்ததாகவும், தன்னை டிரான்ஸ்பரன்சி அமைப்பிலிருந்து விலகும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஜெயசேகரா குறிப்பிட்டுள்ளார். மேலும் புலனாய்வு செய்தியிடல் செயலமர்வில் கலந்துகொண்டால் தான் சித்திரவதை செய்து கொல்லப்படுவேன் என எச்சரித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபரிற்க்கு தான் சில விடயங்களை தெளிவுபடுத்த முனைந்த போதிலும் அவர் அதனை செவிமடுக்கவில்லை. பின்னர் அன்று மாலை குறுஞ்செய்தி மூலமாக எனக்கு ஒரு தகவல் வந்தது-அதில்-ஜானகி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் செயலமர்வு இரத்துச்செய்யப்பட்டு விட்டது. விடுதலைப்புலிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டாம் என தெரிவிக்கப்ட்டிருந்தது.

பின்னர் அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட நிகழ்வு வேறு ஒரு இடத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த வேளை எனது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புவிடுத்த ஒருவர் நான் அவர்களுடைய எச்சரிக்கையை செவிமடுக்காததால் என்னையும் எனது குடும்பத்தையும் கொலை செய்யப்பேவதாக மிரட்டினார் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »