Latest News

July 23, 2014

சிறீலங்காவில் மக்களுக்கும் அடிமைகளுக்கும் வித்தியாசம் இல்லை – ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம்
by admin - 0

சிறிலங்காவில் உள்ள மக்களுக்கும் அடிமைகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டிருந்த 7 கடற்படையினர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குறித்த இரண்டு சிறுமிகளுக்கும் நியாயம் மறுக்கப்பட்டுள்ளது. இது சிறிலங்காவில் சட்ட ஒழுங்குகள் சீர்குழைந்துள்ளமையையே எடுத்துக் காட்டுகிறது. அதேநேரம் அந்த சிறுமிகளின் பெற்றோரை கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக அந்த சிறுமிகளால் தங்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்களை அடையாளம் காட்ட முடியாமல் போயுள்ளது. இவ்வாறான சூழ்நிலைகள் சிறிலங்காவில் பொது மக்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
« PREV
NEXT »

No comments