HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
June 15, 2014
வடக்கின் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் கவலையளிக்கிறது ; பிரித்தானியா
by
admin
10:45:00
-
0
இலங்கையின் வடபகுதியில் மனித உரிமைகள் நிலை தொடர்ந்தும் கவலையளிப்பதாகவே உள்ளது கருத்து , மதச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையிலேயே அப்பகுதி மக்கள் வாழ்கின்றனர் என பிரித்தானியாவின் சமூக , உள்ளூராட்சி , மற்றும் வெளிவிவகாரப் பணியக மூத்த இணையமைச்சர் பரோனஸ் வர்சி தெரிவித்துள்ளார் . அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் , இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதரகம் , ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் தொடர்புகளைப் பேணி வருகிறது . இலங்கையின் வடக்கே மனிதஉரிமை ஆர்வலர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது , சிறுபான்மை மதத்தினர் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்போர் தாக்கப்படுவது , குறித்து பிரித்தானியா கவலை கொண்டுள்ளது . இலங்கையில் போரின் போது இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான , தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் , அதனை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்காளர்களுடன் இணைந்து நாமும் செயற்படுகிறோம் . இலங்கையில் அமைதி , நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் , மனித உரிமைகள் , நல்லிணக்கம் என்பன முக்கியமானவை என்று நாம் நம்புகிறோம் . இந்த முன்னேற்றத்தின் மூலம் , இலங்கையை ஒரு வளமான, வலுவான நாடாகக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தனது உரையில் அவர் தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment