தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது தமிழக மீனவர்களின் ஒரு படகு கடலில் மூழ்கடிக்கப்பட்டதுடன் மற்றொரு படகு சேதமாக்கப்பட்டது.
அத்துடன் தமிழக மீனவர்கள் பிடித்த இறால்களையும் இலங்கை கடற்படையினர் அள்ளிச்சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்ட 32 தமிழக மீனவர்கள் இன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கரையோர காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர்.
Social Buttons