இறுதிப் போரின் போது இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு, அதற்கான ஆதாரமாக அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி அவரது பெற்றோரினால் நேற்று அடையாளம் காணப்பட்டார்.
இராணுவத்தினால் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ள குறித்த யுவதி, மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் நேற்று உறுதிப்படுத்தினர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
இறுதிப்போரில் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாலினி, 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற் போயிருந்தார்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம்.
உசாலினியின் நெருங்கிய பாடசாலை நண்பியொருவர் கருத்து தெரிவிக்கையில்,
07.01.1990 ஆம் ஆண்டு பிறந்த உசாலினி மல்லாவி பாலைநகர் மகா வித்தியாலயத்தில் 2008 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். எல்லோருடனும் அன்பாகவும் கலகலப்பாகவும் பழகுவார்.
அவரைப் பிடிக்காதவர்கள் எங்கள் பாடசாலையிலேயே இல்லை என்று கூறலாம். படிப்பிலும் நல்ல கெட்டிக்காரியாக விளங்கியவர்.
உசாலினியை செல்லமாக மச்சக்கன்னி என அழைப்போம். அவரின் இடது பக்க கன்னத்தில் பெரிய மச்சம் இருப்பதே அதற்கு காரணம் ஆகும்.
இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியா உட்பட ஏராளமானவர்கள், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் துன்புறுத்தப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Social Buttons