காணமல் போன மலேசிய விமானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை அடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் நேற்று(03) கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் மலேசிய விமானம் காணாமல் போனதற்கும் தொடர்புகள் உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.
தென்னிந்திய பெருங்கடலில் மலேசிய விமானம் விழுந்ததாக கூறப்பட்ட போதும் அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில் விமானத்தை குறித்த11 தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என பலத்த சந்தேகம் நிலவுவதாக கூறப்படுகின்றது.
Social Buttons