Latest News

April 18, 2014

விபத்தினில் காயமடைந்தவர்கள் யார்? சந்தேகத்தினில் போராளிகளா?
by admin - 0

இராணுவ சிப்பாய்களை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியொன்று மாங்குளம் - இந்திரபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 18 பேர்; படுகாயமடைந்துள்ளனர். அவ்வாகனத்தினிலிருந்த இருவர் அவசர அவசரமாக வைத்திய சிகிச்சைக்கா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்படாத படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மீதி 16 பேரே வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்;கள் இருவரும் யாரென்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இராணுவ சீருடை அணிய வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளாவென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இவ்விபத்து இன்று (17.04.14) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.
« PREV
NEXT »