கடந்த புதன்கிழமை 470 பயணிகளுடன் சென்ற Ferry என்ற தென்கொரிய கப்பல் கடலில் கவிழந்ததில் அந்த நாடே சோகத்தில் இருக்கின்றது. 179 பயணிகள் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 28 பேர்கள் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டன. மீதியுள்ள பயணிகளின் கதி என்ன என்றே தெரியவில்லை. இதில் 100 பள்ளி மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் நேற்று ஆறு வயது சிறுமி ஒருவரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கப்பலின் உள்ளே இருட்டு அறை ஒன்றில் மயக்கமடைந்து இருந்த அந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. |
தற்போது கண்விழித்த அந்த சிறுமி, தன்னுடைய பெயர் Kwon Ji-Yeon என்றும் தன்னுடைய அப்பா, அம்மா, மற்றும் சகோதரருடன் தான் இன்பச்சுற்றுலா சென்றதாகவும், அந்த சமயத்தில் கப்பல் திடீரென கவிழ்ந்ததாகவும் அழுதுகொண்டே கூறினார். இதில் ஒரு பெரிய சோகம் என்னவென்றால் இதுவரை இந்த சிறுமியின் தாய், தந்தை, சகோதரரின் கதி என்னவென்று தெரியவில்லை. Kwon Ji-Yeon என்ற இந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளதால் இன்னும் பலர் அந்த கப்பலில் உயிருடன் இருக்கக்கூடும் என்றே மீட்புப்படையினர் முடிவு செய்துள்ளனர். இன்று முதல் மேலும் இரண்டு மீட்புக்குழுக்கள் மீட்புப்பணியில் இறங்கியுள்ளது. |
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons