Latest News

January 06, 2014

தமிழன், தமிழன் என்று சொல்லி பிழைப்பு நடத்தும் தமிழ் இயக்குனர் , இசையமைப்பாளர்கள், நடிகர்களால் இது முடியுமா...?
by admin - 0

அமெரிக்க ஹிபொப் கலைஞர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தி நிகழ்சியொன்றில் பங்கேற்றதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் குறித்த ஹிபொப் கலைஞர்கள் புலிக்கொடி ஏந்தி பாடல் பாடியுள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பிரபல இசைக் கலைஞர்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர். புலிக் கொடியை ஏந்தி பாடல் பாடியதுடன்இ புலிகள் பற்றி மேடையில் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் ஆதரவாக கரகோசம் எழுப்புமாறு ஒரு கலைஞர் ரசிகர்களிடம் கோரியதுடன்இ தாமும் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சுதந்திரப் போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.டெட் பெர்ஸ் என்ற ஹிபொப் கலைஞர்களே இவ்வாறு புலிக் கொடியை ஏந்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழன், தமிழன் என்று சொல்லி பிழைப்பு நடத்தும் தமிழ் இயக்குனர் , இசையமைப்பாளர்கள், நடிகர்களால் இது முடியுமா...?


« PREV
NEXT »

No comments