Latest News

January 13, 2014

மழைபொய்த்தமையால் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகும் நெல் வயல்கள் வலிகாமம் விவசாயிகள் பாதிப்பு
by admin - 0

வலி.தென்­மேற்கில் செய்கை பண்­ணப்­ப ட்­டுள்ள பெரும்­போக பயிர்கள் கால்­ந­டை­க ளின் தீவ­ன­மாக மாறி­யுள்­ளன. வயல்­களில் மாடுகள் கட்­டப்­பட்டு மேய்ச்சல் நிலங்­க­ளா கக் காணப்­பட்­டுள்­ளன.
உரிய காலங்­களில் மழை பெய்­யா­த­தி னால் விவ­சா­யி­க­ளினால் கவ­னிக்­கப்­ப­டாது விடப்­பட்ட நெற்­ப­யிர்­க­ளுடன் களை பெரு­ம­ளவில் வளர்ந்­துள்­ளன. கடந்த மாதங்­க ளில் தொடர்ச்து அதிக வெப்­பத்­தினால் நெற்­ப­யிர்­களின் முளைகள் கரு­கிப்­போ­யின.
இதனால் விவ­சா­யிகள் அவற்றை கால்­நடைத் தீவ­ன­மாக மாற்றி கால்­ந­டை­களை மேய­விட்­டுள்­ளதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள் ­ளது.
வலி.தென்­மேற்கில் உள்ள பெரு­ம­ள­வி­லான வயல் நிலங்கள் தற்­போது கால்­ந­டை­களின் மேய்ச்சல் நிலங்­க­ளாக்­கப்­பட்­டுள்­ளன.
மேற்­படி காணி­க­ளுக்கு ஒரு ஏக்­க­ருக்கு (24 பரப்பு) மண்­பண்­படுத்தல், களை­பி­டுங்­கு தல், விதைநெல், களை­நா­சினி, அடி­யுரம், உரம் மற்றும் வேறு செல­வுகள் என ஆகக் குறைந்­தது 21ஆயிரம் ரூபா வரை செலவு செய்தும் நெற்­கா­ணிகள் இறு­தி­யாக இன்று கால்­நடைத் தீவ­ன­மாக மாறி­யுள்­ள­தாக விவ­சா­யிகள் கவலை தெரி­விக்­கின்­றனர்.
பெரும்­போ­கத்­திற்­கான மழை பொய்த்­துப் ­போ­ன­மை­யினால் மழையை நம்பி நெற்­செய்­கையில் ஈடு­பட்ட விவ­சா­யிகள் பெரும் நட்­டத்தைச் சந்­தித்­துள்­ளனர்.
இதற்­கான இழப்­பீட்டை வட­மா­காண விவ­சாயத் திணைக்­களம் வழங்­குமா என அவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.
பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ள தமக்கு இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும் என வலிகாமப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக் கின்றனர்.
« PREV
NEXT »

No comments