வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தை அகற்றவேண்டாம் என பொது மக்கள் கோருவது போன்ற கடிதத்தை காவல்துறையினர் மக்களிடம் விநியோகித்து அக்கடிதங்களில் ஒப்பம் பெற்று வருவதால் அப்பகுதி மக்கள் விசனமடைந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா பண்டாரிக்குளம் பைட்டர் கிறௌன்ட் என்று அழைக்கப்படும் காவல்துறை நிலையம் பொது மக்களின் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. பொது மக்களின் குடியிருப்புகளுக்கிடையில் அமைந்திருக்கும் குறித்த பொலிஸ் நிலையம் அகற்றப்பட வேண்டும் என்று நீண்ட கால மாக சிவில் சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டாமெனவும் காவல்துறை நிலையம் குடிமனைகளுக்கு மத்தியில் அமைந்திருப்பது தமக்கு நன்மையாக உள்ளது என்றும் பொதுமக்கள் கூறுவது போன்று காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட கடிதத்தில், பண்டாரிக்குளத்திலுள்ள வர்த்தக வாணிப நிலையங்கள், பொது மக்களின் வீடுகளுக்கு சென்றும், வீதியில் மக்களை மறித்தும் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் நேற்றுக் காலையிலிருந்து காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, புதன்கிழமை 16 வயது பொதுமகன் ஒருவரிடம் இக்கடிதத்தை கொடுத்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் காவல்துறையினரின் நடவடிக்கை அப்பகுதி தமிழ் தேசிய உணர்வாளர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து நேற்று பொலிஸார் தாமாகவே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment