Latest News

December 02, 2013

வடமாகாண சபை நிர்­வா­கத்தில் தோன்­றி­யுள்ள முறுகல் நிலை
by admin - 0

வடக்கில் யுத்தம் நிறை­வுக்கு வந்து சுமார் 5 ஆண்­டுகள் ஆகி­விட்ட நிலையில் தொடர்ந்தும் மக்கள் பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் ஆளாகி வரு­வ­தாகக் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அர­சியல் ரீதி­யான போட்­டா­போட்­டிகள் இறு­தியில் மறை­மு­க­மான வன்­மு­றை­க­ளுக்கு வழி­வ­குக்­கின்­றதா என்ற ஐயப்­பாடும் இருக்­கவே செய்­கின்­றது. அண்மைக் கால­மாக வடமாகாண சபையின் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களின் வீடுகள் இனந் தெரி­யாத நபர்­க­ளினால் தாக்­கு­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இதனால் அவர்கள் மிகுந்த பீதிக்கு மத்­தி­யி­லேயே தமது வாழ்க்­கையைக் கொண்டு நடத்த வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
யாழ்.சாவ­கச்­சேரி பிர­தேச சபை உறுப்­பினர் சி.சிறீ­ரஞ்­சனின் வீட்­டுக்குள் கடந்த புதன்­கி­ழமை நுழைந்த இனந்­தெரி­யாத ஆயு­த­தா­ரிகள் வீட்டை அடித்து நொறுக்கி வீட்­டி­லி­ருந்த பொருட்­களை தீயிட்­டுள்­ள­துடன் துப்­பாக்கிப் பிர­யோ­கமும் செய்து விட்டுத் தப்பிச் சென்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை, யாழ். திரு­நெல் ­வேலியில் அமைந்­துள்ள வடமாகாண விவ­சாய அமைச்சர் பொ.ஐங்­க­ர­ நே­சனின் வீட்டின் மீது கடந்த வியா­ழ­னன்று அதி­காலை 3 மணி­ய­ளவில் கல்­வீச்சுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் இதனால் வீட்டின் முன்­பக்கக் கண்­ணா­டிகள் நொறுங்கிப் போன­தா­கவும், இரண்டு மோட்டார் சைக்­கிள்களில் வந்த இனந்­தெ­ரி­யா­த­வர்­களே இவ்­வாறு தாக்­கு­தலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதே­போன்று வட­ம­ராட்­சியில் கர­வெட்டி பிர­தேச தலைவர் பொ.வியா­கேசு, வல்­வெட்­டித்­துறை நகர சபை உப தவி­சாளர் சதீஸ் ஆகி­யோரின் வீடுகள் மீதும் தாக்­குதல் இடம்­பெற்­ற­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
“இனந்­தெ­ரி­யாத நபர்­களின் தாக்­குதல்” என்ற பதம் கடந்த யுத்த காலத்­தி­லேயே ஊட­கங்­களில் அடிக்­கடி பாவிக்­கப்­பட்டு வந்­தன. யுத்தம் முடி­வ­டைந்த கையோடு அதுவும் முடி­வுக்கு வந்­தது. எனினும் இத்­த­கைய தாக்­குதல் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் மீண்டும் வடக்கில் இனந்­தெ­ரி­யாத நபர்­களின் பிர­சன்னம், சட்டம் ஒழுங்கைப் பாதிப்­ப­தற்கு அப்பால், பாது­காப்­புக்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளுக்குப் பெரும் சவாலைத் தோற்­று­வித்­துள்­ள­மை­யையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். இவ்­வாறே தாக்­குதல் சம்­ப­வங்கள் தொட­ரு­மானால், மக்கள் பாது­காப்பு தொடர்பில் நம்­பிக்கை இழந்து­ விடு­வ­துடன் மிகுந்த விரக்­திக்கும் ஆளாக நேரும் என்­பதே யதார்த்­த­மாகும்.
யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான இன்­றைய சூழ்­நி­லையில் வடமாகா­ணத்தின் சிவில் நிர்­வாகம் எவ்­வாறு அமைந்­துள்­ளது என்­பதை சர்­வ­தே­சமும் மிகவும் உன்­னிப்­பாகக் கவ­னித்து வரு­கின்­றது. இந்த நிலையில் மக்­களை அச்­சு­றுத்தும் வகை­யி­லான எத்­த­கைய சம்­ப­வங்கள் இடம் பெற்­றாலும் அது பாரிய விமர்­ச­னத்­துக்கும் கண்­ட­னத்­துக்கும் உள்­ளா­ன­தா­கவே இருக்கும் என்­பதை நினைவில் கொள்­வது அவ­சியம்.
இது ஒரு புற­மி­ருக்க வடமாகாண சபையின் சீரான இயக்­கத்­திற்கு அர­சாங்­கமும் வடமாகாண சபையின் உறுப்­பி­னர்­களும் விட்டுக் கொடுப்­பு­க­ளுக்கு மத்­தியில் தங்கள் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது அவ­சியம் என்ற கருத்து பர­வ­லாக இருந்து வரு­கி­றது. எந்தத் தரப்பும் ஒன்­றுக்­கொன்று மாறா­கவும் ஏட்­டிக்குப் போட்­டி­யா­கவும் நடக்கும் பட்­சத்தில் அது பொது­மக்­க­ளுக்கே பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருக்கும்.
தற்­போ­தைய சூழ்­நி­லையில் வட மாகாண சபைக்கும் அரச தரப்­புக்­கு­மி­டையில் ஒரு வித முறுகல் நிலை தோன்­றி­யுள்­ளதோ என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.
சாவ­கச்­சேரி பிர­தேச சபையின் உள்­ளூ­ராட்சி வாரப் பரி­ச­ளிப்பு நிகழ்வு அண்­மையில் இடம்­பெற்­ற­போது அதில் முதன்மை விருந்­தி­னராக கலந்து கொண்ட வடமாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் வழங்­கப்­பட்ட அதி­காரப் பகிர்வை சிதைக்க சதி நடப்­ப­தாக விசனம் தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் அர­சாங்கம் போதிய அதி­காரப் பகிர்வை வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்ற போதிலும் அர­சுடன் சேர்ந்­தி­யங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்­சர்கள் சிலரும் அலு­வ­லர்கள் சிலரும் வடமாகாண சபையை இயங்­க­வி­டாமல் முடக்க முயற்­சிப்­ப­தா­கவும் அவர் கடு­மை­யாக சாடி­யி­ருந்தார்.
இதே­வேளை, மஹிந்த சிந்­தனைக் கொள்கைத் திட்­டங்கள் உரிய முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­த­னையும் உறு­திப்­ப­டுத்தும் தேவைப்­பாடு வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு உள்­ளது என்­பதை அறி­வு­றுத்தும் வகையில் அண்­மையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அவ­ருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­தி­ருந்தார்.
நடை­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டங்கள் இரண்டில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கலந்­து­கொள்­ளாமல் இருந்­த­தை­ய­டுத்து ஜனா­தி­பதி இவ்­வா­றான அறி­வித்­தலை வழங்­கி­யி­ருந்தார்.
இதற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், மஹிந்த சிந்­த­னையை முன்­வைத்து வட மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­வர்­களை மக்கள் நிரா­க­ரித்­து­விட்­டனர். மஹிந்த சிந்­தனை என்ற தனிப்­பட்ட ஒரு­வ­ரு­டைய சிந்­த­னை­யையும் செயற்­பா­டு­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும் என்ற தேவை எங்­க­ளுக்குக் கிடை­யாது என அவர் திட்­ட­வட்­ட­மாகக் கூறி­விட்டார். அத்­துடன், வடமாகாண சபை­களின் செயற்­பா­டு­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாகக் கூற­மு­டி­யாது. ஏனெனில் எம்மால் செயற்­பட முடி­யா­த­வாறு முட்­டுக்­கட்­டைகள் போடப்­ப­டு­கின்­றன என்றும் அவர் கூறி­யுள்ளார்.
ஆளு­நரின் அனு­ம­தி­யின்றி செயற்­பட முடி­யாது என அதி­கா­ரிகள் மட்­டத்தில் கூறப்­ப­டு­வதே இந்த முட்­டுக்­கட்­டைக்­கான பிர­தான கார­ண­மாகும். அதா­வது, இந்த அதி­கா­ரிகள் மத்­திய அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இது­வரை காலம் ஆளு­நரின் கட்­டுப்­பாட்டின் கீழேயே செயற்­பட்டு வந்­துள்­ளனர் என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.
இதுவே வடமாகாண சபையின் சீரான செயற்­பா­டு­க­ளுக்கு ஒரு­புறம் பாரிய முட்­டுக்­கட்­டை­க­ளையும் அதே­வேளை, ஒரு­வித முறுகல் நிலை­யையும் தோற்­று­வித்­துள்­ளது என்று கூறலாம். இந்த நிலையில் சபையில் கடந்த திங்­க­ளன்று இடம்­பெற்ற வரவு-செலவுத் திட்ட மூன்றாம் நாள் விவா­தத்தின் போது வடமாகா­ணத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெற்­றுள்ள நிலையில் அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள 13 ஆவது திருத்­தத்தின் பிர­காரம் மாகாண அதி­காரம் முத­ல­மைச்­ச­ருக்கா அல்­லது ஆளு­ந­ருக்கா என்­பது தொடர்பில் தீர்­மா­னிக்கும் தருணம் அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
வடமாகாண சபை நிர்­வாகம் சீராக அமைய வேண்­டு­மானால் அதற்கு மத்­திய அரசு பரி­பூ­ரண ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அவ்­வாறு இல்­லாத ஒரு சந்­தர்ப்­பத்தில் வடமாகாண சபை நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கு­வதை தவிர்க்க முடி­யாது. அந்த வகையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட வடமாகாண சபை தமது நட­வடிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தையும் காண முடி­கின்­றது.
புதி­தாக அமைக்­கப்­பட்ட வட மாகாண சபை நிர்­வா­கத்தை சீரான முறையில் முன்­னெ­டுப்­ப­தற்குத் தேவை­யான ஒத்­து­ழைப்பை முழு­மை­யாக வழங்­கு­வ­தற்­கான அர­சியல் கடப்­பாட்டை அர­சாங்கம் கொண்­டுள்­ளது.
இருந்­த­போ­திலும், மாகாண நிர்­வா­கங்­க­ளுக்கு உட்­பட்ட விட­யங்கள் தொடர்பில் தன்­னிச்­சை­யான முடி­வு­களை ஆளுநர் மேற்­கொண்டு வரு­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றது.
ஒரு வகையில் மத்­திய அரசின் பிர­தி­நி­தி­யாக இருக்கும் ஆளு­ந­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டையில் மாகாண சபை நிர்­வா­கத்தில் இழு­பறி நிலை தோன்­றி­யுள்­ள­தையே வெட்ட வெளிச்­ச­மாகக் காண முடி­கின்­றது.
இது ஒரு புற­மி­ருக்க குறு­கிய காலத்தில் மாகாண அமைச்சின் செய­லா­ளர்கள் திடீர் திடீ­ரென மாற்­றப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக வடமாகாண போக்­கு­வ­ரத்து, வர்த்­தக, கிரா­மிய அபி­வி­ருத்தி அமைச்சர் டெனீஸ்­வ­ரனின் செய­லாளர் அமைச்­ச­ருக்குத் தெரி­யா­ம­லேயே மாற்­றப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. அத்­துடன் முத­ல­மைச்­சரின் செய­லா­ளரும் மாற்­றப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய திடீர் மாற்­றங்கள் நிர்­வாக ரீதி­யான சிக்­கல்­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ள­தாக கூட்­ட­மைப்­பினர் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
ஒரு வகையில் வடமாகாண சபைத் தேர்­த­லுக்கு முன்­ன­தா­கவே கூட்­ட­மைப்பு ஆட்­சியைக் கைப்­பற்றும் பட்­சத்தில் இத்­த­கைய நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலைமை உரு­வாக வேண்டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட ஒன்­றாகும்.
குறிப்­பாக, கூட்­ட­மைப்­பி­னரும் தமது தேர்தல் பிர­சா­ரத்தின் மூலம் ஆளுநர் மாற்­றப்­பட்டு சிவில் அதி­காரி ஒருவர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.
இந்த விதமான நெருக்கடியின் பின்னணியில் வடமாகாண சபை தொடர்பில் உருவாகியுள்ள சர்ச்சை புதிய விடயமோ, வியப்புக்குரிய விவகாரமோ அல்ல என்று கருதலாம். எவ்வாறிருந்தபோதிலும், வடமாகாண சபை தனது செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்கக் கூடிய சூழலை உருவாக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும்.
புதிய வடமாகாண சபை சீராக செயற்பட முடியாது போகும் பட்சத்தில் அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்தின் மீது பழியைப் போட முனைவார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
வடமாகாண சபையை சீராக இயங்கச் செய்வதன் மூலமே வட பகுதி மக்களின் பிரச்சினைக்கு முடிவு காண்பது மாத்திரமன்றி யுத்த வடுக்களையும் ஆற்றக் கூடியதாக இருக்கும் என்ற யதார்த்தத்தையும் மறந்து போகக் கூடாது. மாறாக வட மாகாண சபையின் இயக்கத்திற்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்கள் கூட்டமைப்பின் குற்றச்சாட்டை மறுபுறம் நியாயப்படுத்துவதாகவும் அமைந்து விடும்.
வட மாகாண சபை எத்தகைய நெருக்கடிகளை எதிர்நோக்கினாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பது காலத்தின் கடப்பாடாகும்.
« PREV
NEXT »

No comments