Latest News

November 06, 2013

நோ பயர் சோன் காணொளி பொதுநலவாய நாடுகள் கவலை – ரிச்சட் உக்கு
by admin - 0

இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் அரசாங்க தரப்பு மேற்கொண்ட யுத்தக்குற்றங்களை வெளிப்படுத்தும் நோ பயர் சோன் காணொளி, பொதுநலவாய நாடுகள் அமைப்பை கவலையடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலயா நாடுகளின் செயலகத்தின் பேச்சாளர் ரிச்சட் உக்கு, இன்று தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.
செனல் 4 தயாரித்த நோபயர் சோன் காணொலியை தாம் தற்போதே பார்வையிட்டதாகவும், அதில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் எந்த அளவு கொடுமையானதாக இருந்திருக்கும் என்பதை உணரக்கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேசவிதிமுறைகளுக்கு அமைய, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவதே, இலங்கை அரசாங்கத்துக்கு தற்போதுள்ள ஒரே ஒரு துருப்புச் சீட்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments