உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதிருக்க முடிவுசெய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பிபிசியிடம் கூறினார்.
மன்மோகன் சிங் வராமல் இருக்க முடிவு செய்திருப்பது எங்களின் மாநாட்டின் வெற்றியைப் பாதிக்காது. அதனை நாங்கள் ஒரு பிரச்சனையாகக் கருதவில்லை' என்றும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
'அவரது முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, நாங்கள் அவரை அழைத்தோம், அவர் வந்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம்' என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க இந்தியப் பிரதமர் எடுத்துள்ள முடிவு இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவாக கருதப்பட முடியுமா என்று பிபிசியின் கொழும்பு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜி.எல். பீரிஸ் இந்தப் பதிலைக் கூறினார்.
No comments
Post a Comment