Latest News

October 30, 2013

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கமாட்டேன்– சீ.வி.விக்னேஸ்வரன்
by admin - 0

அடுத்த மாதம் கொழும்பில்
நடக்கவுள்ள கொமன்வெல்த்
மாநாட்டில் தாம் பங்கேற்க வாய்ப்பில்லை என்று வடக்கு மாகாண
முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள
அவர், கொமன்வெல்த் உச்சி மாநாட்டில்
பங்கேற்கவோ, அதில் உரையாற்றவோ
இலங்கை அரசாங்கம் இதுவரை எந்த
அழைப்பையும் அனுப்பவில்லை. அங்கு நான் செல்வேன் என்று நினைக்கவில்லை. கொமன்வெல்த் மாநாட்டில்
பங்கேற்பதா இல்லையா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நான் ஆலோசனை கேட்பேன். கட்சியின் முடிவுகளுக்கு அமையவே நான் நடப்பேன். என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டில் பொருத்தமான
ஒரு அமர்வில், வடக்கு மாகாண முதல்வர்
விக்னேஸ்வரனை உரையாற்ற
அழைப்பது குறித்து சிறிலங்காவின்
ஆளும்கட்சித் தலைவர்கள்
கலந்துரையாடியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன்
இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments