Latest News

October 18, 2013

விடுதலைப் புலிகள் நடேசன் படுகொலை தொடர்பில் பரபரப்பு தகவல்
by admin - 0

சிங்கள அரச படைகளினால் இறுதி சமரின் போது வெள்ளை கொடி பிடித்து வந்த நடேசன் .புலித்தேவன் உட்பட்ட பிரபல தளபதிகள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர். இவர்களுடன் மேலும் 400 க்கு மேற்பட்ட முதன்மை மற்றும் சாதாரண போராளிகள் சரணடைதலில் உள்ளடங்குவார்கள்.
நடேசன் புலித்தேவனும் வதைகள் செய்யபட்டு சுட்டு கொலை செய்யபட்டனர்,குறித்த காணொளி காட்சி சனல் போவிடம் சிக்கியுள்ளதாக பர பரப்பாக பேச பட்டது. இந்த காட்சி வெளியிடபட்டால் அது இலங்கை அரசுக்கு உலகளாவிய ரீதியில் பாரிய நெருக்கடியினை தோற்றுவிப்பதோடு இந்தியா மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை தழுவ இது உதவும் என கூறபடுகிறது.
அத்துடன் இலங்கையில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டையும் இது பாதிக்கும் என நம்ப படுகிறது.அந்த தேர்தலை இலக்கு வைத்து இந்த காட்சிகள் வெளியாகலாம் என்பதும் இதில் இறுதி வேளை இலங்கையில் நின்று களமாடிய இந்தியா சிப்பாய்களின் ஆவணமும் உள்ளடங்கபடுவதாக பேச படுகிறது.
1500 க்கும் மேற்பட்ட இந்தியா படைகள் குறித்த புலிகளின் முற்றுகை திடீர் தாக்குதலில் உடல் சிதறி பலியான சம்பவங்கள் அந்த களத்தில் அரங்கேறின என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது இங்கே சுட்டி காட்ட தக்கது. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். வரப்போவது எது என்பது. ஆனால் வெளிவரும் காட்சிகள் உலக தமிழரை கொந்தளிக்க வைக்கும் என்பது அடித்து கூறபடுகிறது.
« PREV
NEXT »

No comments