முகப் புத்தக சமூக வலைத்தளத்தை தடை செய்வதற்கோ அல்லது அதனை மட்டுப்படுத்துவதற்கோ இதுவரையில் எந்தவிதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் இன்ஞ பாராளுமன்றத்தில் அறிவித்தது.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதான நடவடிக்கையில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் முடிவடைந்ததும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
இதன்போது கேள்வி தொடுத்த அவர் பேஸ்புக் வலைத்தளத்தை தடை செய்வதற்கு அல்லது அதனை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறான திட்டம் இருக்கின்றதா என்பதை தெளிவுபடுத்துமாறு பிரதமரிடம் அல்லது அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,
பேஸ்புக்கை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது அதனைத் தடை செய்வதற்கோ அரசாங்கத்தினால் எந்தவிதத் தீர்மானமும் எடுக்கவில்லை என்றார்.
No comments
Post a Comment