ஆனால், ரஜினி மவுனமாகவே இருந்து வந்தார்.
இந்தநிலையில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ரஜினி தளம் மற்றும் ரஜினிகாந்த் தலைமையகம் என்ற பெயரில் ரஜினிகாந்திற்கு நரேந்திர மோடி பூங்கொத்து கொடுப்பது போலவும், அதில் 'உங்களத்தான் நம்புது இந்த பூமி, இனி இந்தியாவுக்கு நல்ல வழிகாமி', 'மக்களின் எதிர்பார்ப்பே ஒளிரட்டும் பாரதம்', 'பாரத தாயை மீட்க, தர்மம் காக்க வந்தவரே' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டி உள்ளனர்.
இந்த போஸ்டர்களால் பாஜகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மற்ற கட்சியினரோ வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
No comments
Post a Comment