Latest News

September 17, 2013

முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் தாக்கி ஒருவர் பலி
by admin - 0

முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மேற்படிச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 2 பேர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த சுரேஸ் என்று அழைக்கப்படும் இராசய்யா கவிதன் (வயது 35) என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவருடைய சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments