Latest News

September 13, 2013

இலங்கை யுத்தம் குறித்த அறிக்கை மீளாய்வு செய்யப்படுகின்றது – ஐ.நா
by Unknown - 0

இலங்கை யுத்தம் குறித்த அறிக்கை மீளாய்வு செய்யப்படுவதாக ஐக்கிய நர்டுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர், பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். மீளாய்வின் பின்னர் முழு அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் செயற்படத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
« PREV
NEXT »

No comments