முள்ளிவாய்க்கால் உட்பட்ட இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் படையினரின் தாக்குதலால் சேதமடைந்த மக்களின் வாகனங்கள் உட்பட்ட போர் அழிவுச் சான்றுகளை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் இறுதிப் போர் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிடுவார் என்று முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிப்போர் அழிவுகள் தொடர்பிலான சான்றுகளை அகற்றும் நடவடிக்கையினை படைத்தரப்பு மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.
கனரக வாகனங்களின் துணையுடன் முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் களப்பு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த எரிந்த வாகனங்களின் எச்சங்கள் அகற்றப்பட்டு வன்னியின் காட்டுப்பகுதிகளுக்கு மாற்றப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிப்போர் நடைபெற்ற பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்பாக அங்கிருந்த இறந்த உடலங்களின் எலும்புக் கூடுகளும் எரித்தழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment