Latest News

August 17, 2013

சரணடைந்த, காணாமல் போனோரின் விபரங்களை வெளியிட வேண்டும்: நவநீதம்பிள்ளையிடம் முறையிடுவோம்- அனந்தி
by admin - 0

இறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்த, காணா­மற்­போன முன்னாள் போரா­ளிகள் மற்றும் தமிழ் மக்­களின் விப­ரங்­களை வெளி­யி­டு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­த­வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யிடம் முறை­யி­ட­வுள்ளோம் வட­மா­காண சபை தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்­பாகப் போட்­டி­யி­டு­கின்ற விடு­தலைப் புலி­களின் முன்னாள் அர­சியல் துறை பொறுப்­பாளர் எழி­லனின் மனைவி திரு­மதி அனந்தி சசி­தரன் தெரி­வித்தார்.

நாங்கள் சிந்­திய குரு­தியும் எமது மக்­களின் உயிர்த் தியா­கங்­களும் ஒரு போதும் வீண்­போ­கக்­கூ­டா­தென்­ப­தற்­கா­கவும் தோற்­றுப்­போன இனம் மீண்டும் புத்­துயிர் பெற்று எழ வேண்­டு­மென்­ப­தற்­கா­க­வுமே நான் வட மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றேன் எனவும் தெரி­வித்தார்.
யாழ். ஊடக அமை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வன்­னியில் நடை­பெற்ற இறுதி யுத்­தத்தின் போது அப்­ப­கு­தியில் நான் வாழ்ந்­ததால் எமது மக்கள் பட்ட துன்ப, துய­ரங்­களை நான் அறிவேன். முல்­லைத்­தீவில் எனது கண­வரும் ஏனைய போரா­ளிகள் சிலரும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். யுத்தம் முடி­வ­டைந்து நான்கு வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் சர­ண­டைந்த எனது கணவர் மற்றும் போரா­ளிகள் தொடர்­பான விவ­ரங்கள் எதுவும் எனக்குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.
எனது கண­வரை விடு­விக்­கு­மாறு நான் பல அர­சாங்க அதி­கா­ரி­க­ளிடம் முறை­யிட்­டுள்ளேன்.

ஆனால் எனக்கு நியாயம் கிடைக்­க­வில்லை. எனது பிரச்­சி­னையை இழுத்­த­டிக்­கின்­றார்கள். ஓரம் கட்­டு­கின்­றார்கள். என்னை அச்­சு­றுத்­து­கின்­றார்கள். எனது கண­வரைப் போல் இறுதி யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த பல­ருக்கு என்ன நடந்தது என்­பது தொடர்­பாக இன்­னமும் தக­வ­லில்லை. யுத்­தத்தில் பெற்­றோரை இழந்த பிள்­ளை­களும் கண­வனைப் பறி­கொ­டுத்த பெண்­களும் தொழில் வாய்ப்­புக்கள் எது­வு­மற்ற நிலையில் பரி­த­விக்­கின்ற ஏழை­களும் அங்­க­வீ­னர்­களும் தற்­பொ­ழுது மிகவும் பாதிக்­கப்­பட்ட நிலையில் உள்­ளனர்.

இந்த அர­சாங்கம் இவர்­க­ளு­டைய அடிப்­படைப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு இன்­னமும் எது­வுமே செய்­ய­வில்லை. இவர்­க­ளு­டைய எதிர்­கா­லத்தைச் செம்­மைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் வளப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வுமே நான் இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றேன்.

நான் ஒரு பெண் வேட்­பாளர் என்ற வகையில் பெண்­களின் பிரச்­சி­னை­களை நன்கு உணர்ந்து கொண்­டுள்ளேன். இதனை உணர்ந்து கொண்­ட­வர்­க­ளாக என்னை எதிர்­கா­லத்தில் வட­மா­காண சபைத் தேர்­தலில் வெற்றி பெறச் செய்­வார்கள் என்ற நம்­பிக்கை எனக்­குண்டு.
தற்­பொ­ழுது பெண்­க­ளுக்­கெ­தி­ரா­கவும் சிறு­வர்­க­ளுக்­கெ­தி­ரா­கவும் நடை­பெற்று வரு­கின்ற வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்கத் தீர்­மா­னித்­துள்ளோம்.

நாங்கள் தோற்­றுப்­போன இனம் எனக் கரு­து­மி­டத்து மீண்டும் மீண்­டெழ முயற்­சிக்க வேண்டும். நாம் சிந்­திய குரு­தியும் உயிர்த் தியா­கங்­களும் வீண்­போ­காது என்ற தெளி­வான சிந்­த­னை­யு­ட­னேயே நான் வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றேன்.

முன்னாள் போரா­ளிகள் மற்றும் அவர்­களின் உற­வு­க­ளுக்கு இன்றும் தமிழ் மக்கள் மத்­தியில் மதிப்பும் மரி­யா­தையும் வர­வேற்பும் காணப்­ப­டு­கின்­றது. மிக நன்­றாக அவர்­களை எமது தமிழ் மக்கள் நடத்­து­கின்­றார்கள். இந்த வகையில் என்­னையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்­பிக்கை எனக்­குள்­ளது.

இறுதி யுத்­தத்தின் போது நடை­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்கு சாட்­சி­யாக நாம் உள்ளோம். யுத்தம் நிறை­வ­டைந்து நான்கு வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் எமது மக்­க­ளுக்கு நீதி­யான ஒரு தீர்வு இந்த அர­சாங்­கத்­தினால் இன்­னமும் வழங்­கப்­ப­ட­வில்லை. உரி­மை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காகப் பல போராட்­டங்­களை மேற்­கொண்டு நாம் தோற்­றுப்­போ­யுள்ளோம்.

பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்­த­வர்கள் போன்றோர் தொடர்­பாக இது­வரை இந்த அர­சாங்கம் எந்­த­வொரு தக­வ­லையும் வெளி­யி­ட­வில்லை. இவ்­வி­டயம் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை அம்­மை­யா­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யி­டு­வ­தற்கு எனக்கு நிறை­வான ஆத­ரவு கிடைத்­துள்­ளது. நான் ஒரு முன்னாள் போரா­ளி­யல்ல. போரா­ளியின் மனைவி.
எனக்கு யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியா­யமும் நிரந்­த­ர­மான தீர்வும் கிடைக்கவேண்டுமென்ற விருப்பமுள்ளது. அரசியலின் மூலமாகவே எமக்கான நியாயத்தினை நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் உதவுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன். அரசாங்கம் காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற் கொள்வதற்காக எம்மையும் சர்வதேச நாடுகளையும் ஏமாற்றுகின்ற செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. எமக்கான தீர்வை இந்த அரசாங்கம் ஒருபோதும் வழங்கப்போவதில்லை. நாங்கள் தான் தீர்வைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றார்.

« PREV
NEXT »

No comments