Latest News

July 28, 2013

யாழ் மாவட்டத்தில் இருந்து எதுவித வேட்புமனு விண்ணப்பங்களும் இல்லை - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
by admin - 0

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தல் தொடர்பாக யாழ் மாவட்டத்தில் இருந்து எதுவித விண்ணப்பங்களும் இதுவரை கிடைக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்தார். வட மாகாண சபைக்கான யாழ் தவிர்ந்த ஏனைய மாவட்டத்திற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் வினவியபோது அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில்..
இன்று எமது கட்சித்தலைவரின் தலைமையில் மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வேட்பாளர்களுக்கான நேர்முகத்தேர்வு முடிவடைந்துள்ளது. இதன்படி உத்தியோக பூர்வமாக வேட்பாளர்களின் விபரங்களை நாளை (28) வெளியிட தீர்மானித்துள்ளோம். மேலும் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்தே மேற்படி மாவட்டங்களில் போட்டியிடவுள்ளோம். ஆனால் யாழ் மாவட்டத்தில் போட்டியிட இதுவரை விண்ணப்பங்கள் எமக்கு கிடைக்கவில்லை. எனினும் யாரும் போட்டியிட விண்ணப்பிப்பார்களாயின் அதை பரீசிலிக்க தயாராகவுள்ளோம். தற்போது இம்மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் தொகை குறைவாகவுள்ளது.எனினும் ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற வேண்டும் எனும் நோக்கில் எமதுகட்சி இன்று வரை செயற்பட்டு வருகிறது. எனவே தான் எந்த விட்டுக்கொடுப்புக்கும் எமது கட்சி தயாராகவுள்ளது. 
மேலும் தற்போது எம்.சிராஸ் என்பவருக்கு எமது கட்சி சார்பாக எதுவித வேட்பாளர் தகுதியும் வழங்கியதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை.இத்தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். எனவே தான் எந்த ஒரு முடிவும் யாழ் மாவட்டம் தொடர்பாக இதுவரை எதுவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments