Latest News

July 02, 2013

சமூக வலைத்தளங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என்ற கோத்தாவின் கருத்து சரியானது: சரித்த
by admin - 0

சமூக வலைத்தளங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்து முற்றிலும் சரியானது என வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தெரிவித்தார். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இயங்குகிற சிறிய எண்ணிகையினரின்
சூழ்ச்சிகளே நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகளை தோற்றுவிக்க கூடியவனாக இருக்கின்றன.
எனவே அவ்வாறான சூழ்ச்சிகளைத் தடுக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களை தொடர்ந்தும்
கண்காணித்து வருவதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments