வட மாகாணத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை அற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான கபே மற்றும் ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வு நிலையம் என்பன இணைந்து கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு நடமாடும் சேவைகளை மேற்கொண்டன.
இந்த சேவைகளின் போது, வட மாகாணத்தில் தேசிய அடையாள அட்டை அற்ற நிலையில் மக்கள் உள்ளமை தெரயவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் படி 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை அற்ற நிலையில் உள்ளமை தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படியிருப்பினும், எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் நலன் கருதி தற்காலிக அடையாள அட்டையினை பெற முடியும் என ஆள்பதிவு திணைக்களம் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment