முள்ளிவாய்க்களில் எம் இனத்தை அடித்து கொன்றழித்த சிங்களம் நாடு கடந்தும் அடிக்கிறது என்றால் உலகத்தில் தமிழன் என்ன அனாதையா? பிரிந்து கிடக்கும் தமிழினமே ஒன்றாக நீயிருந்தால் காலால் உன் தங்கையை,அக்காவை உன் உடன் பிறந்தவளை இப்படி காலால் சிங்களவன் உதைவானா படை பெரிதென்றால் கிட்ட வந்திருக்க மாட்டான் ஒன்றுமை இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? ஜனநாயக வழியை சிங்களதேசம் வன்முறை வழியால் எதிர்கிறது. தமிழன் அகிம்சையின் வழிவந்தவன் தீலீபனை ஈன்ற தமிழ் சிங்களவனின் வன்முறைக்கு ஜனநாயக வழியில் மீண்டும் மீண்டும் முறியடிப்போம்.அதற்க்கு எம்மை நாம் தாயார் படுத்த வேண்டும் அதாவது ஒன்றாக நாம் நிற்பதே தயார் படுத்தலாகும். 20ம் திகதி காடிஃப் நகரில் மீண்டும் ஒரு கிரிகெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் இலங்கை அணி விளையாடாவும் உள்ளது. எனவே அதன் முன்னால் மற்றுமொரு பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்த இளைஞர்கள் முடிவுசெய்துள்ளார்கள். தமிழர்களின் ஒற்றுமை அங்கே பறை சாற்றுங்கள் நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை சுகந்திர போராட்ட இனம் என்பதை பறை சாற்றுவோம். அமைப்பு பேதமின்றி தமிழன் என்று ஒரு அமைப்பின் கீழ் அணிதிரளுவோம் இதிலும் இணையா தமிழன் எப்போது ஒன்றுபடுவான் தமிழர் நாம் ஒன்றுபட சிங்களம் நேற்று களம் அமைத்து கொடுத்துள்ளது. ஒன்றுபடுவோம்.
சரவணை மைந்தன்
No comments
Post a Comment