இந்த இரண்டு சந்தேக நபர்களும் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணியளவில் சிறைக் கூடத்தின் சுவரில் ஓட்டை போட்டு பாரிய இரண்டு கிறவல் கற்களை கழற்றி வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக எதிரிசூரிய தெரிவித்தார்.
தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் மற்றையவர் பற்றி எதுவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என சமிந்த எதிரிசூரிய தெரிவித்தார்.
கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொள்ளை சம்பந்தமாக ஹம்பாந்தோட்டை ஹுங்கம பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். தப்பித்த சந்தேக நபர் ஹுங்கம பகுதியைச் சேர்ந்தவர்.
இவர்கள் தப்பிச் சென்றது சம்பந்தமாக அந்த நேரத்தில் கடமையிலிருந்த ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்து விசாரித்து வருவதாகவும் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய தெரிவித்தார்.
தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் மற்றையவர் பற்றி எதுவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என சமிந்த எதிரிசூரிய தெரிவித்தார்.
கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொள்ளை சம்பந்தமாக ஹம்பாந்தோட்டை ஹுங்கம பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். தப்பித்த சந்தேக நபர் ஹுங்கம பகுதியைச் சேர்ந்தவர்.
இவர்கள் தப்பிச் சென்றது சம்பந்தமாக அந்த நேரத்தில் கடமையிலிருந்த ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்து விசாரித்து வருவதாகவும் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய தெரிவித்தார்.
No comments
Post a Comment