Latest News

June 01, 2013

பாழடைந்த கிணற்றில் இயந்திர துப்பாக்கி வெடிபொருட்கள் கண்டெடுப்பால் பரபரப்பு-திருச்சி
by admin - 0


சமயபுரம் அருகே, பாழடைந்த கிணற்றில், அதிநவீன இயந்திர துப்பாக்கி, தோட்டக்கள்,வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தெபஸ்தார். இவர், பால வித்யாமந்திர் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

இவரது தோட்டத்தில், பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில், துப்பாக்கி குண்டுகள் கிடந்ததை, நரேந்திரன் என்பவர் பார்த்துள்ளார். இதுகுறித்து, அவர், சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், பாழடைந்த கிணற்றில் தோண்டி பார்த்தபோது, அதில், அதிநவீன ரக இயந்திர துப்பாக்கி ஒன்றும், 40 தோட்டாக்கள், 17 காலி டெட்டனேட்டர்கள் கிடைத்தன.

இதைக் கைப்பற்றிய போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கார்பன் வகை துப்பாக்கி, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு இருக்கும் போலீசாருக்கும், உயர்மட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கும் வழங்கப்படுவது. கிணற்றில் துப்பாக்கி இருந்தது குறித்து, சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

« PREV
NEXT »

No comments