Latest News

June 04, 2013

அவசர நோயாளி காவு வண்டி விபத்து நோயாளி மரணம்
by admin - 0

பொத்துவிலில் விபத்துக்குள்ளாகிய நபரை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ்
வண்டி விபத்துக்குள்ளாகியதால் நோயாளியுடன் சென்ற டாக்டர் மற்றும் ஊழியர் ஆகியோர்
விபத்துக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் வைத்திய சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன்
அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நோயாளி மரணமடைந்துள்ளதாக பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரி அஜித்குமார பிட்டிகல தெரிவித்தார். இச் சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. பொத்துவிலைச் சேர்ந்த றொட்டை ஜெய்க்கா கிராமத்தில் வசிக்கும் அயாத்து சம்சுதீன் (49 வயது)
எனும் 7 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் பொத்துவிலிருந்து றொட்டை ஜெய்க்கா கிராமத்திற்கு சைக்கிளில் செல்லும் போது இரவு 8
மணியளவில் பொத்துவில் அக்கரைப்பற்று வீதியில் குஞ்சானோடை பாலத்திற்கப்பால்
விபத்துக்குள்ளாகி தலைப்பகுதி பலமாக பாதிக்கப்பட்ட நிலையில் பொத்துவில் மாவட்ட ஆதார
வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அவர் அம்பாறை வைத்தியசாலைக்கு அறுவைச் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்படும்
போது அம்பாறை - கண்டி வீதியிலுள்ள பலகல எனுமிடத்தில் கென்டர் வாகனமும் பொத்துவில்
வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டியும் மோதியதில் உயிரிழந்தார்.q
« PREV
NEXT »

No comments