Latest News

June 28, 2013

'வெளிநாட்டு சதி பலிக்காது': பிரிட்டிஷ் பிரஜை கொலைச் சந்தேகநபர்
by admin - 0

 இலங்கையில் பிரிட்டிஷ் பிரஜை ஒருவர்
சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய
சந்தேகநபரான ஆளுங்கட்சி அரசியல்வாதி,'இலங்கை அரசை கவிழ்க்க எடுக்கப்படும் சர்வதேச முயற்சி பலிக்காது' என்று கூறியுள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த
முடியாது என்றும் கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள
தங்காலை பிரதேச சபைத் தலைவரும் ஆளுங்கட்சி அரசியல்வாதியுமான சம்பத்
பத்திரண ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த வழக்கு முன்னர் தங்காலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில்
விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில்
இன்று அழைக்கப்பட்டது. இந்த வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால்
தங்காலை பிரதேசசபைத் தலைவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 8 பேருக்கு எதிரானஇந்த வழக்கை கொழும்புக்கு மாற்ற வேண்டும் என்று சட்டமா அதிபர் விடுத்த வேண்டுகோளின்படியே விசாரணை கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில்
நடந்தது. இந்த வழக்கை கொழும்பில்
தொடர்ந்து விசாரிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிசார்
நீதவானிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது சந்தேகநபர்கள் சார்பான சட்டத்தரணி, தங்காலை பிரதேசசபைத்
தலைவர் சம்பத் பத்திரண உத்தியோகபூர்வ வேலையாக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு நீதவான், பிணை வழங்கிய
மேல்நீதிமன்றத்திடம் அது தொடர்பான
கோரிக்கையை முன்வைக்குமாறு தெரிவித்துவிட்டார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1ம்
திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே,
தன்மீதான குற்றச்சாட்டுக்களை நாட்டுக்கு எதிரான சர்வதேச சதி என்று சம்பத்
பத்திரண விமர்சித்தார். தெற்கே, தங்காலையில் கடந்த 2011-ம் ஆண்டு நத்தார் பிறப்பன்று இரவு பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கேளிக்கை விடுதியொன்றில்
வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நண்பியானவெளிநாட்டு யுவதியும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக
அப்போது கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments