Latest News

June 02, 2013

தேசியத்தலைவரின் ஆசைகளில் ஒன்று நிறைவேறி இன்று லண்டனில் அறிமுகமாகிறது!
by admin - 0

 தேசியத்தலைவரின் ஆசைகளில் ஒன்று நிறைவேறி,
திரு.ஜேபி.லூயிஸ் அவர்களின் (MANUAL OF THE
VANNI DISTRICTS  எனும் நூல் தமிழில்
மொழி பெயர்க்கப்பட்டு இன்று லண்டனில்
அறிமுகமாகிறது. இது கடந்த 30.10.2006ம் ஆண்டு நவம் அறிவுக்கூடத்தில் நடந்த
வரலாறுகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றினை எதிர்கால
சந்ததிக்கு தெரியப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலில் தமிழீழ
தேசியத்தலைவர் அவர்களும், தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு.
பேபி சுப்ரமணியம் அண்ணா அவர்களும் . அப்ப்போது தமிழீழ
தொல்பொருளாய்வகப் பொறுப்பாளராக இருந்த திரு யோகி அண்ணா அவர்களும் மற்றும் பலரும்
கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடலில் உரை நிகழ்த்திய தேசியத்தலைவர் அவர்கள்
எமது வரலாற்றை சொல்ல விழைந்த வெளிநாட்டு ஆய்வாளர்களின்
நூல்களை தமிழில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட வேண்டும்
என்று கூறியதுடன், திரு.ஜேபி.லூயிஸ் அவர்களின் (MANUAL OF THE
VANNI DISTRICTS  எனும் நூல் இதில் முக்கியமானது எனவும்
தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்திற்கேற்ற வகையில் இந்நூல் இன்று தமிழில்
மொழி பெயர்க்கப்பட்டு லண்டனில் அறிமுகமாகிறது.
« PREV
NEXT »

No comments