Latest News

June 09, 2013

ஆஸி. நோக்கிச்சென்ற படகு மூழ்கியதில் 9 அகதிகள் பலி
by admin - 0

அவுஸ்திரேலியாவுக்குச் செல்லுமுகமாக 70 அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கிறிஸ்மஸ் தீவுகளின் அருகில் மூழ்கியதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
நீரில் மிதந்த 9 சடலங்களை சனிக்கிழமை பகல் வேளையில் அவதானித்த அதிகாரிகள் தேடுதலை ஆரம்பித்தனர்.
இந்த அகதிகள் படகின் வருகையினை எச்.எம்.எஸ். எனும் படகு உறுதி செய்துள்ளது.
நீரில் மூழ்கிய படகானது கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தீவினை நோக்கி பயணித்ததாகத் தெரியவருகிறது.
இதேவேளை, மூன்று விமானங்கள், எச்.எம்.எஸ். எனும் படகு மற்றும் இரண்டு வர்த்தக கப்பல்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டாம் படகு விபத்து இதுவாகும். கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற படகு விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்தனர்.
மேலும் கடந்த ஜூன் மாதம் 200 பேரை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதில் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் 85 பேர் காணாமல் போயிருந்தனர்.
இதனைத்தவிர இயந்திரக் கோளாறு காரணமாக படகொன்று பாறையில் மோதியமையால் 50 புகலிட கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவுகளின் அருகில் உயிரிழந்தனர்.

« PREV
NEXT »

No comments