நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து சேனைப்புலவு மக்களும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும்
இணைந்து அழைப்புவிடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளன. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
சம்வம் நடந்து இதுவரை காலமும் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கயவன் கைது செய்யப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் வேதனையையும் விரக்தியையும் தருகிறது.
இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும். அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் அசண்டையீனமான பேச்சுக்களும்இ அதிகாரத் தோரணையான எச்சரிக்கைகளும் இந்த மாணவிக்கு நடந்த அநீதியை மூடி மறைப்பதற்கான செயலாகவே காணப்படுகிறது. தடையங்களை அழித்தல்
மிரட்டல்கள் மூலம் நீதி கேட்பவர்களை பயமுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் மோசமான ஜனநாய
மறுப்புக்கள் நடந்தேறி வருகின்றது. நாடாளவிய ரீதியில் தொடர்ச்சியாக இவ்வகையான சம்பவங்கள் அதிகரித்த வண்ணமுள்ள நிலையில் இப்படியான
கோர நிகழ்வுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எனவே குற்றவாளிகளை சட்டத்தின் முன்
அடையாளப்படுத்துகின்ற விடயத்தில் துரிதமான செயற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்கள்
செய்யாதவிடத்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறையையும் துஸ்பிரயோகத்தையும் தடுக்க
முடியாது என்பதை அனைவரும் உணருதல் வேண்டும். பெருமளவான மக்கள் ஆக்ரோசத்துடன் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட
மாணவிக்கு நீதி வழங்குங்கள் குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சட்டம் என்ன இருட்டறையா? பெண்கள்
சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தை அமுல் படுத்து சிறுவர்களைக் கொல்லாதே தமிழ் சிறுமி என்பதால் பாராட்சமா?
போன்ற கோசங்களை எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கான மகஜர்
ஒன்று நெடுங்கேணி பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட சட்டத்தரணி அருட்சகோதரி ரமணிமுஸ்லிம் சகோதரி ஜென்சிலா மனித
உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர் பவான் நெடுங்கேணிப் பிரதேச சபைத் தலைவர் சுப்பிரமணியம்
No comments
Post a Comment