Latest News

May 07, 2013

தேசிய தலைவரால் அமெரிக்க படையில் தமிழர்கள் இணைப்பு
by admin - 0

தமிழர்களின் போரிடும் ஆற்றலை உலகறியச் செய்து,
உலகை வியக்க வைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.
பிரபாகரன் அவர்கள், இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின்
போரிடும் அற்றலை நன்கு அறிந்த உலக வல்லரசான அமெரிக்கா 6
மாதங்களுக்கு முன் தனது பாதுகாப்புப் படையில்
தமிழர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. பல வழி ஆராய்ச்சிகளின்
அடிப்படையிலேயே இத்தீர்மானத்தை எடுத்திருந்தது அமெரிக்கா. தமிழீழத் தேசியத்
தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் இந்நூற்றாண்டில் தமிழர்களின் போரிடும்
ஆற்றலை உலகறியச் செய்தமைக்கான யுத்த தளங்களாக தமிழீழத்தில் நடைபெற்ற 1ம்,
2ம், 3ம் மற்றும் 4ம் கட்ட விடுதலைப் புலிகளின் மண் மீட்புப்
போராட்டங்களை குறிப்பிடலாம். சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் அமெரிக்கா முதல் பல வல்லரசுக்கள்
சிறிலங்கா அரசிற்கு பல வகையிலான இராணுவ உதவிகளையும் வழங்கியிருந்தன
அவற்றைக் கொண்டு சிங்களத்தினால் அன்று விடுதலைப் புலிகளை விழ்த்த
முடியவில்லை. மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்
போரிடும் ஆற்றல் இவற்றை தகர்த்து சிங்களத்திற்கு மட்டுமல்லாமல் பல
வல்லரசு நாடுகளையும் மிரளவைத்து அவர்களை உலுக்கியிருந்தது என்றால் அது மிகையாகாது. அன்று புலிகளின் அடியை சிங்களம் மட்டுமல்ல மறக்கவில்லை, அமெரிக்காவும்
மறந்துவிடாதமையினால் தமிழர்களின் வீரத்தினை தன்னொடு இணைத்துக்
கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்கா. தமிழீழ விடுதலைப்
புலிகளின் படைகொண்டு தமிழரின் வீரத்தினை இவ்வுலகிற்க்கு அறியச்
செய்திருக்கிறார் தமிழிழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். கனவில் புலிகளைக் கனவாக கண்டு அச்சத்தினால் மிரண்டு எழுந்து கொள்பவர்கள்
சிங்களப் படையினர், விடுதலைப் புலிகளின் படையினருடன் போரிட முடியாத
நிலையில் பல மைல்களுக்கு போர்க்களத்தை விட்டு தப்பியோடியவர்கள் சிங்களப்
படையினர், சிலர் ஓட முடியாத நிலையில் பனை மரத்தில் ஏறி இருந்தோம்
என்று சிங்களப் படையினர் கூறிய வரலாறும் உண்டு. இவ்வாறு சிங்களக் கோழைகளில் வரலாறுகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
சிங்களக் கோழைகளும் வல்லரசுகளும் ஒன்று கூடி தமிழீழ விடுதலைப்
புலிகளை விழ்த்துவதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது அவர்களை ஆயுதங்கள்
இல்லாதவர்களாக முடமாக்க வேண்டும் என்ற கோழைத்தனமான
திட்டத்தையே செயல்படுத்தினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் படையின் பலமாக பீரங்கிப் படையணி இருப்பதாக
சிறிலங்கா இராணுவத் தளபதியாக பல ஆண்டுகளாக பணியாற்றிய சரத்
பொன்சேகா பல முறை கூறிவந்திருக்கிறார். அவர்களின் முதல் திட்டம்
புலிகளுக்கு அயுதத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலமாகவே புலிகளை விழ்த்த
முடியும் என்ற கோழைத்தனமான சிந்தனையும், மற்றும் தடைசெய்யப்பட்டவற்றைக்
கொண்டு ஆயுதங்களாக பயன்படுத்தினால் மட்டுமே தான் புலிகளை விழுத்த முடியும் என்ற கோழைத்தனமான எண்ணமும், தமிழினத்தை அழிக்கும்
திட்டமுமே சிங்களத்திடம் குடிகொண்டிருந்தது. புதுக்குடியிருப்பு மற்றும் எனைய இடங்களில் நடைபெற்ற மோதல்களில்
புலிகளை விழுத்த முடியாத நிலை சிங்களத்திற்கு ஏற்பட்ட
போது தடைசெய்யப்பட்டவற்றை ஆயுதங்களாக பயன்படுத்தியிருந்தது சிங்களம்.
இது தான் சிங்களத்தின் வீரத்தின் அழகாகும். உண்மையில் தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் போராடி வெல்ல முடியாத கோழைகள் நாங்கள் என்பதையே சிங்களம்
இதில் இருந்து உணர்த்தியது. இந்தச் சிங்களக் கோழைகளைத் தான் அண்மையில் ராமரின் வழித் தோன்றலில் வந்தவர்கள் என்று பாரதிய ஜனதாக் கட்சியின்
அத்வானி கூறியிருந்தார். போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகள்
கிடைத்தாலும் விடுதலைப் புலிகளுடன் நேர்வழியின் ஊடாகப் போரில் தங்களால்
வெற்றியை பெறமுடியாது என்ற அழுத்தமான நம்பிக்கையே சிங்களத்திடம் இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றலை நேர்வழியின் ஊடாக
தோற்கடிக்க முடியாது என்பது சிங்களம் நன்கு உணர்ந்திருந்தது.
இதனையே உலகவல்லரசான அமெரிக்காவும் மற்றைய நாடுகளும் உணர்ந்திருந்தன. ஆனால் புலிகள் நேர்வழிப் போரினையே நடத்தினார்கள். தமிழினத்தை தலை நிமிரச் செய்து, தமிழரின் வீரத்தினை உலகறியச் செய்தவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள், இதனை தமிழ்க்குலம் காக்க அவதரித்த தமிழீழத் தேசியத்
தலைவர் இந்நூற்றாண்டில் நிகழ்த்திக் காட்டினார். தாய்மண் மீதும், தமிழ் மக்கள் மீதும் பிரபாகரன் அவர்கள் அதிக பற்றைக்
கொண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி, பிரபாகரன் என்ற நாமம்
இன்னும் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும்
அழித்துவிடமுடியாது என சிங்கள இனத்தவரான விக்கிரமபாகு கருணாரட்ன
சென்றவருடம் கூறியிருந்தார். அதி உயரிய உன்னதமான அர்ப்பணிப்புக்களை தமிழீழம்
என்ற இலக்கிற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் செய்திருந்தார்கள், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஏற்றி வைத்த தீ எரிந்துகொண்டு தான் இருக்கிறது.
அது தமிழீழம் என்ற இலக்கை அடையாமல் அது அணையாது. -விஸ்வா
« PREV
NEXT »

No comments