
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் அவர் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நவநீதம்பிள்ளை 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும் அவர் விடுத்திருந்த உத்தியோகபூர்வ அழைப்பை இலங்கை அரசாங்கம் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment