Latest News

May 21, 2013

முல்லைத்தீவு பகுதியில் பாடசாலை சென்ற மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற புலனாய்வாளர்
by admin - 0

முல்லைத்தீவு உடையார்கட்டு குரவாய்
பகுதியில் உடையார்கட்டு மகாவித்தியாலயத்திற்கு உயர்தர கற்பதற்காய் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மாணவி காட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வாளரால் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வேளை பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி வழமையாக
பாடசாலை செல்வது போன்று நேற்று காலை தனது துவிச்சக்கரவண்டியில்
பயணத்தை ஆரம்பித்து சென்று கொண்டிருக்கை
7.00 மணியளவில் முல்லைத்தீவு உடையார்கட்டு குரவாய் அடர்ந்த காட்டுப் பகுதியல் தனிமையில் சென்ற மாணவியை சிவப்பு நிற உடை அணிந்த இராணுவப் புலனாய்வாளர் ஒருவர்
தள்ளி விட்டு அடர்ந்த காட்டுக்குள் இழுத்துச் சென்று கொண்டிருக்கையில்
மாணவி கூச்சலிட்டதால் பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டார். இவ் நாசகார வேலையில் ஈடுபட்ட இராணுவப்
புலனாய்வாளரை இனம் கண்ட பிரதேச வாசிகள் பெற்றாரின் உதவியுடன் பொலிசில் முறைப்பாடு செய்யச் சென்ற
வேளை உடையார்கட்டு மகாவித்தியாலய அதிபர் மற்றும் கிராம முன்னேற்றச்சங்கத் தலைவர் ஆகியவர்கள் அதனைத் தடுப்பதுடன் இச் செயட்பாட்டை மூடிமறைக்க முயற்சிப்பதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடததக்கது.
« PREV
NEXT »

No comments